Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் பகுதியில் சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மணலை இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருடி விற்பனை செய்து வருகின்றனர்.
போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் மணல் திருட்டை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வில்லியனூர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
வில்லியனூர் திருக்காமேஷ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பல்வேறு பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
வில்லியனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இறுதியில் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் நிறைவடைந்தது.